search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக சாலை மறியல்"

    மு.க.ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து தஞ்சையில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க எம்.எல்.ஏ உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று கலந்து கொண்டார். தி.மு.க.வினர் எதிர்ப்பு- தெரிவித்து நாமக்கலில் கருப்பு கொடி போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட தி.மு.க எம்.எல்.ஏ உள்பட 192 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை சைதாப் பேட்டையில் தி.மு.க சார்பில் இன்று கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 

    இதைதொடர்ந்து கவர்னர் மாளிகைக்கு பேரணியாக செல்லும் போராட்டத்தில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு தி.மு.க சார்பில் சாலை மறியல் போராட்டம் இன்று நடந்தது. மாவட்ட செயலாளர் துரை.சந்திர சேகரன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், ஒன்றிய செயலாளர்கள் அருளாணந்தசாமி, முரளிதரன், இளைஞர் அணி அமைப்பாளர் சண்.ராமநாதன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டம் குறித்து துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயக முறையில் நாமக்கல்லில் கருப்பு கொடி போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து போராட்டம் நடத்தி கவர்னரிடம் மனு கொடுக்க சென்ற மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து போராட்டம் நடத்தினோம். எங்கள் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    தி.மு.க. சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் டி.எஸ்.பி ஜெயசீலன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர்.

    நாமக்கல்லில் கவர்னருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியதால் கைது செய்யப்பட்ட தி.மு.க. வினரை விடுதலை செய்யக்கோரி தி.முக.வினர் பல்வேறு இடங்களில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    பேராவூரணியில் ஒன்றிய பொருப்பாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நகர செயலாளர் நீலகண்டன், முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக்குமார், சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம், நகர செயலாளர் நீலகண்டன் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    ×